Sep 17, 2026 - 06:17 PM

மாலபேயில் அதிவேக நெடுஞ்சாலைப் பாலத்திற்கு அருகில் இருந்து T56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 145 தோட்டாக்கள் அடங்கிய தொகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























