Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை

Aug 29, 2026 - 10:53 AM

மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை
Mobitel Inner 1278

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் குறித்த விசேட கலந்துரையாடல், நேற்று (28) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

கடந்த காலங்களில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் அகழ்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

எதிர்காலத்தில் கனிம வள அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சிறப்புக் குழுவின் அனுமதியும் பெறப்பட வேண்டும் எனப் புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மாற்றங்கள் அடங்கிய 26/1298/110/046 இலக்கமுடைய புதிய சுற்றுநிருபம், 2026 ஜூலை 6 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு மற்றும் வீதி புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்குக் கனிம வளங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இருப்பினும், அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பல அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனைக் கருத்தில் கொண்டு, அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமான கனிம வள அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிருபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவையான கனிம வளங்களை உரிய அனுமதிகளுடன், கட்டுப்பாட்டு விலைகளில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். 

மேலும், கனிம வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்தவும், சட்டவிரோத அகழ்வுகளைத் தடுக்கவும் இந்நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தப் புதிய நடைமுறையானது வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278