Sep 18, 2026 - 10:35 PM

நாட்டின் இளைஞர்களைப் பலப்படுத்துவதற்காகவே 'சர்வஜன அதிகாரம்' உருவாக்கப்பட்டது என அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களுக்கு இன்று (18) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சர்வஜன அதிகாரத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சர்வஜன இளைஞர் முன்னணியின் உத்தியோகபூர்வ சபை நியமனமும் இதன்போது இடம்பெற்றது.
சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறுகையில்,
"நான் ஜனாதிபதியாவதற்கோ அல்லது இங்கு உள்ளவர்கள் அமைச்சர்களாவதற்கோ சர்வஜன அதிகாரம் உருவாக்கப்படவில்லை. அத்தகைய சிறிய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல. நமது இளைஞர்கள் என்றுதான் முன்னேறப் போகிறார்கள்? அதனால்தான், நாளைய நாளில் நீங்கள் ஜனாதிபதியாக விரும்பினால்.. இதோ அதற்கான இடம்.. சர்வஜன அதிகாரம்" எனத் தெரிவித்தார்.





























