Sep 19, 2026 - 02:30 PM

கேகாலை பகுதியில் நேற்று (18) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏர் ரைபிள் (Air rifle) ரகத் துப்பாக்கியொன்றினால் ஹோட்டலொன்றின் உள்ளேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஹோட்டலுக்கு வந்த இருவருக்கும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து, ஹோட்டல் ஊழியர் ஒருவரே இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக மேலதிகத் தகவல்கள்





























