Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
வேலைநிறுத்தத்திலும் இயங்கிய ரயில்கள்: ஊழியர்களுக்கு பாராட்டு

Sep 18, 2026 - 04:12 PM

வேலைநிறுத்தத்திலும் இயங்கிய ரயில்கள்: ஊழியர்களுக்கு பாராட்டு
Mobitel Inner 1278

தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ரயில் சேவையை முடிந்தவரை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

தற்போது முன்னெடுக்கப்படும் ரயில் தொழிற்சங்க நடவடிக்கை, குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் ரயில் சேவையை அதிகபட்ச அளவில் பேண முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

வேலைநிறுத்தம் அமுலில் இருந்த நேற்று (17) ஒரு நாளில் மட்டும் 187 ரயில் பயணங்களை முன்னெடுக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் தேவி உள்ளிட்ட யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் கடுகதி ரயில் சேவைகளை இன்று (18) முன்னெடுப்பதற்கு ஊழியர்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டிய பிரதி அமைச்சர், தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலகி சேவையில் இணைந்து கொண்டவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 

பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, எவ்வித விபத்துகளுக்கும் இடமளிக்காமல் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்காக சில அதிகாரிகள் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

பொதுவாக பெருமளவிலான ஊழியர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மருத்துவர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார். 

"இதனை சாதாரணக் கடமையாக மட்டும் கருதி முடித்துவிட முடியாது. கடினமான சூழ்நிலையிலும் பொதுச் சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகப் பொறுப்பேற்ற அதிகாரிகளும் ஊழியர்களும் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு முழு அரசாங்கத்தின் மற்றும் ரயிலில் பயணிக்கும் மக்களின் கௌரவம் உரித்தாக வேண்டும். உங்களது தளராத அர்ப்பணிப்புக்கு நன்றிகள். சவால்களுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்காக ரயில் சேவையைப் பாதுகாத்த உங்களுக்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் கௌரவம் உரித்தாகிறது." என்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278