Sep 16, 2026 - 03:40 PM

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதே ஹெலிகொப்டர் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளானதன் பின்னர் அந்த ஹெலிகொப்டர் தீப்பற்றி எறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே அதில் பயணித்தவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





























