Header Logo
Vallibel FD
Selan Bank
உலகம்
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 675ஆக உயர்வு

Aug 29, 2026 - 08:19 PM

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 675ஆக உயர்வு
Mobitel Inner 1278

மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (29) 675 ஆக உயர்ந்தது. 

பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து உடல்களை மீட்டு வருகின்றனர். 

ஒகஸ்ட் 26 அன்று நேபாளத்தைத் தாக்கிய இந்த பேரிடரைத் தொடர்ந்து, 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 

நேபாள பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சித்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 248 சடலங்கள் மீட்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நவல்ப்பராசி கிழக்கு (158), நவல்ப்பராசி மேற்கு (75) மற்றும் கோர்கா (54) ஆகிய மாவட்டங்களில் சடலங்கள் மீட்கப்பட்டன. 

மேலும், தாடிங் (49), நுவாகோட் (41), தனஹு (31) மற்றும் ரசுவா (13) ஆகிய மாவட்டங்களிலிருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது. 

நேபாள - திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து நிகழ்ந்த பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக இந்த பேரிடர் ஏற்பட்டது. 

இதன் விளைவாக உருவான நீர், சேறு மற்றும் குப்பைகள் கலந்த பெருவெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்து, நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதுடன், நீர்மின் நிலையங்களையும் அழித்தது. 

பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தபோதிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் 5,000-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காணாமல் போனவர்களைக் கண்டறியவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடையவும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ ஆணைக்குழுவின் (NDRRMA) தலைமையிலான குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து, இதுவரை 184 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாள சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தத் தகவல்களின்படி, மொத்தம் 187 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் அல்லது அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். 

அதேவேளையில், 420 வெளிநாட்டினர் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. 

மீட்கப்பட்டவர்களில் 114 இந்தியர்கள், 27 சீனர்கள் மற்றும் 20 தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். 

மீதமுள்ளவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் பல உடல்களை மீட்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், பரவலான பாதிப்புகளுக்குள்ளான மக்களுக்கு உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதால், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278