Header Logo
Vallibel FD
Selan Bank
உலகம்
நேபாள பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1200ஐ கடந்தது

Sep 3, 2026 - 02:15 PM

நேபாள பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1200ஐ கடந்தது
Mobitel Inner 1278

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளன. 

இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதி அனைத்தும் சுமார் 8 மாவட்டங்களை நிறைத்து இருக்கின்றன. 

கிராமங்கள் மற்றும் நகரங்கள் என ஆற்றின் போக்கில் இருந்த பகுதிகள் அனைத்தும் சேறு சகதியால் நிறைந்து காணப்படுகின்றன. 

வரலாறு காணாத இந்த பேரிடரில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது. 

நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் துணையுடன் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளின்போது அடுத்தடுத்து உயிரிழந்தோரின் உடல்கள் சிக்கி வருகின்றன. 

இதில் தற்போது வரை 1,252 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட உடல்கள் சிக்கி வருவதால் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. 

மீட்கப்பட்ட உடல்கள் பெரும்பாலும் உருக்குலைந்து காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே அவற்றுக்கு மரபணு சோதனை நடத்தி மொத்தமாக புதைக்கப்பட்டு வருகின்றன. 

அதேநேரம் இந்த உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றின் புகைப்படங்களை நேபாள பொலிஸாரின் இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறு 911 பேரின் புகைப்படங்கள் பதிவேற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுவரை கைப்பற்றப்பட்ட உடல்களில் வெறும் 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த 6,500-க்கு அதிகமானோர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். 

அதேநேரம் வெள்ளத்தில் மாயமானவர்களில் இன்னும் 4,875 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர். 

எனவே அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் பொலிஸார், இராணுவ வீரர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். 

இவர்கள் மாயமானவர்களை தேடுவதுடன், சேதமடைந்த வீதிகளை சீரமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர். 

இதற்கிடையே நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பேரிடர் பாதித்த ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 

மேலும் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக நீர்மின் நிலைய சுரங்கங்கள் நீர் நிரம்பி காணப்படுகின்றன. இந்த கடினமான சூழலால் அவற்றில் சிக்கியிருக்கும் சுமார் 600 பேரை மீட்கும் பணிகளில் சிக்கல் நீடிக்கிறது. 

நேபாள இராணுவம், பொலிஸார் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் இரவு பகலாக நடத்தி வரும் தேடுதலில் இதுவரை எந்த பலனையும் அளிக்கவில்லை. அங்கே சிக்கியிருப்பவர்கள் பற்றிய எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. 

மேலும் மீட்புப்பணிகளுக்கான நவீன தளவாடங்களை சுரங்கப்பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. அத்துடன், சுரங்கங்களின் வாயில் பகுதியை கண்டறிவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் சுரங்க மீட்புப்பணிகள் பெரும் மந்தமாகவே நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பேரிடரில் சிக்கியவர்கள் தொடர்ந்து பிணமாக மீட்கப்படுவதும், மாயமான ஆயிரக்கணக்கானோரை பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதும் நேபாளம் மட்டுமின்றி உலக நாடுகளையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278