Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி!

Aug 31, 2026 - 05:30 PM

தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி!
Mobitel Inner 1278

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை தோனி கோரியதாகப் பரவி வரும் வதந்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், அணியின் பங்குகளைப் பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் சில செய்திகள் பரவின. 

தோனி முதலில் சிஎஸ்கே அணியின் 25 சதவீத பங்குகளைக் கேட்டதாகவும், பின்னர் தனது கோரிக்கையை 20 சதவீதமாகக் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதற்குப் பதிலாக, சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு 5.5 சதவீத பங்குகளை வழங்க முன்வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தத் தகவல்கள் எதற்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. 

தோனி எந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா? சொத்து மதிப்பு இவ்வளவா? இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், "இந்த வதந்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை" என்று தெரிவித்துள்ளார். 

அடுத்ததாக, 2027 ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது இரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. காயம் காரணமாக கடந்த சீசனில் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. 

இந்நிலையில், தோனி இன்னும் தனது ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

"தான் விளையாடப் போவதில்லை என்று தோனி இதுவரை கூறவில்லை. எனவே, பொறுத்திருந்து பார்ப்போம்" என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். 

முன்னதாக, தோனி எந்த ஒரு பொறுப்பில் இருந்தாலும் அவரை சிஎஸ்கே அணியுடன் எப்போதும் இணைத்து வைத்திருக்கவே நிர்வாகம் விரும்புகிறது என்று விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார். 

"தற்போது வரை நாங்கள் தோனியுடன் எதையும் விவாதிக்கவில்லை. அவர் தனது முடிவுகளைத் தனிப்பட்ட முறையில் எடுப்பார், அதற்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கிறோம்" என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

Mobitel 1278